Sunday, May 11, 2008

அம்மா ......

அம்மா . . . . . .

வலிகள் பல தாங்கி என்னை இந்த உலகிற்குத் தந்தாய்
கைப்பிடித்து நடக்கக் கற்றுக்கொடுத்தாய்

படிப்புத்தான் எல்லாம் என்றாய்
உன் வசதிக்கு அதிகமாகவே நல்ல பள்ளியில் பயில வைத்தாய்

என் சந்தோசங்களில் என்னுடன் சிரித்தாய்
என் சங்கடங்களில் என்னுடன் அழுதாய்

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இறைவன் இருக்கிறான்-
கவலைப்படாதே உன்னைக் கைவிடமாட்டான் என்றாய்

அப்படித்தான் எண்ணியிருந்தேன் நானும்
அப்படித்தான் எண்ணியிருந்தேன் நானும் !!!!

பறந்து வந்து வெளியிடம் பார்த்துவிட்டேன்
நிறைய மனிதர்களுடன் பழகி மனங்களைத் தெரிந்து விட்டேன்

புரிந்தது உலகம் மெல்ல.. உன்னையும் புரிந்தது !
உன்னையும் புரிந்தது !

அம்மா ...

நீ அறியாமை பெருங்குழியில் இருக்கிறாய்!

உன்னை பகுத்தறிவுக் கயிரிட்டு வெளிச்சத்தில் கொண்டுவரத் தவிக்கிறேன் !!
நீயோ, என்னை அலச்சியப்படுத்திவிட்டு ....

உன் பேத்தியை அந்த இருட்டுக்குள் இழுக்க அரும்பாடுபட்டுக் கொண்டுருக்கிறாய் !!!

அய்யகோ! என் செய்வேன் நான் !!!!!

Thursday, January 3, 2008

பெரியார்


சுயநலம் பொங்கிப் பெருகிக் கிடக்கும் உலகமிதில்
அணுஅளவேனும் கூட சுயநலமில்லா சமுதாயத் தொண்டாற்றிய பெரியாரே!

உம்மைப் பற்றிய அறிவு வளர வளர
உம் எழுத்துக்களைப் படித்து மனம் தெளியத் தெளிய
என் இதயத்தில் உம் மதிப்பு உயருதையா!
என் நெஞ்சத்தின் தூண்டுகோள் உம் வாழ்கையையா!


Thursday, October 11, 2007

இந்திய விஞ்ஞானிகளின் அறிவியல் மோசடி!!!!!

சுவீ டன் நாட்டு விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியின் முடிவுகளை நம் அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர். முனைவர். செல்லத்துரை உட்பட நான்கு பேர் சேர்ந்து ஒரு மாற்றமும் இல்லாமல் (ஈ - அடிச்சாங் காப்பினு சொல்லுவாங்களே!!!) வேறு ஒரு அறிவியல் பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளனர்.

இதில் சம்மந்தப்பட்டவர்களின் விபரம் :

1. கே. முத்துக்குமரன், அண்ணா பல்கலைக் கழகம் , சென்னை
2. ரோசன் பொகலவலெ , ஒக்லகோமா பல்கலைக் கழகம், நார்மன் ஐக்கிய அமெரிக்க நாடுகள்
3. டாம் மத்யுச் , இந்திரா காந்தி அணுமின் நிலையம், கல்பாக்கம்
4. செ. செல்லத்துரை, அண்ணா பல்கலைக் கழகம் , சென்னை


தலைப்பிலும் கட்டுரையிலும் சிறிய மாற்றமே செய்யப்பட்டுள்ளது. இதை அந்த பத்திரிக்கையும் வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் அதை பார்த்த அதன் உண்மையான உரிமையாளர்கள், அந்த பத்திரிக்கையில் புகார் தெரிவித்துள்ளனர்.


மேலும் விவரங்களுக்கு :
http://www.liu.se/en/news-and-events/News
http://horadecubitus.blogspot.com/2007/10/great-minds-think-alike.html#comment-716259335855921555
http://horadecubitus.blogspot.com/2007/10/translation-of-swedish-article-on.html


நேர்மை என்பது எல்லா விடயங்கலிலும் தேவையே!!

இப்படி அச்சு அசல் ஒத்திருக்கும் மோசடியை என்ன சொல்வது!!!




Wednesday, October 3, 2007

ஐன்ச்டீன் (ஐன்ஸ்டீன்) கடவுளைப் பற்றி என்ன சொல்கிறார்?



அல்பர்ட் ஐன்ச்டீன், இவர் தனது படைப்புகளின் மூலம், அறிவியலில் பெரும் திருப்பங்களை ஏற்ப்படுத்தியவர். இருபதாம் நூற்றாண்டின் பிரபலமான மனிதர்களுள் ஒருவர். 1921ஆம் ஆண்டு இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இவரைப் பற்றிய இந்த (அட்டைப் படம் - மேலே பார்க்க) புத்தகத்தை சமீபத்தில் படிக்க நேர்ந்தது,
ரொம்ப வித்தியாசமான மனிதராகவே இருந்திருக்கிறார். தனக்கு வரும் கடிதங்களுக்கு பதில் அளிக்கும் பழக்கமுடையவராக இருந்திருக்கிறார்.

அப்படி ஒரு கடிதமும் அதன் பதிலும் இங்கே:

ஒரு பள்ளி மாணவி தன் கடிதத்தில் கேட்ட கேள்வி: "விஞ்ஞானிகள் பிரார்த்தனை செய்வார்களா? செய்தால் என்ன வேண்டிக் கொள்வார்கள்?"


ஐன்ச்டீன் சொல்கிறார்:

என்னுடைய பதிலை என்னால் இயன்ற அளவு எளிமையாகத் தர முயற்சித்திருக்கிறேன். இது தான் என் பதில்:

இயற்கையின் விதிகளின் படி தான் ஒவ்வொரு செயலும் நடக்கும் என்ற எண்ணமே விஞ்ஞான ஆராய்ச்சிக்கு அடிப்படை. ஆகவே, இந்த விதி மனிதர்களின் செயல்களுக்கும் பொருந்தும். இந்தக் காரணத்தினாலேயே, செயல்களின் நிகழ்வை பிரார்த்தனை பாதிக்கும் (அ) மற்றும் என்ற கூற்றின் மீது, ஒரு ஆராய்ச்சி விஞ்ஞானி நம்பிக்கை வைப்பது மிகவும் அரிதே!! அதாவது, மனிதனுக்கு அப்பாற்பட்ட (கடவுள் என்று சொல்கிற) ஒன்றிற்கு வைக்கும் கோரிக்கை (வேண்டுதல்/ பிரார்த்தனை) மூலம் செயல்களின் நிகழ்வை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை ஒரு விஞ்ஞானிக்கு இருக்க வாய்ப்பில்லை!

இந்தபடியான இயற்கை விதிகளைப் பற்றிய நமது அறிவு, முழுமையற்றதாகவும், கோர்வையற்றதாகவுமே உள்ளது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அதனால், அனைத்து நிகழ்வுகளையும் விளக்கக்கூடிய இந்த விதிகளின் இருப்பை நம்புவதும் ஒருவித நம்பிக்கையே! ஆனால், இந்த நம்பிக்கை, விஞ்ஞான ஆராய்ச்சிகளின் மூலம் பெரிதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்னொரு புறம், இயற்கையின் இந்த விதிகளில் ஒரு சக்தி இருப்பது, அறிவியலில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் அனைவரும் ஒத்துக்கொள்ளக் கூடியதே! இந்த சக்தியானது, மனிதனின் ஆற்றலை விட மிக மேன்மையும் பலமும் வாய்ந்தது. இதன் முன், மனிதன் தன் அளவான சக்திகளுடன் மிக எளியவனாகவே உணரவேண்டும். இந்த வகையில் பார்த்தால், அறிவியலில் ஈடுபட்டிருப்பதுவும் ஒரு மதத்தைப் பின்பற்றுவது போல ஒரு உணர்ச்சியை ஏற்ப்படுத்தும், இந்த மதமானது ஒரு அறிவியல் அறியாத/சாராத மனிதனின் மதத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதே!!!

இந்தக் கருத்துக்களை அறிவியல் சார்ந்தவளாக, நான் ஏற்றுக்கொள்கிறேன். பள்ளிப் பருவம் முதல் பயிலும் அறிவியலின் மீது நம்பிக்கை இருக்கும் போது கடவுளையும் நம்பமுடியுமா?


உங்களின் கருத்துக்களைப் பதியுங்களேன்!

Friday, September 14, 2007

கடமைப்பட்டிருக்கிறேன்!!!!!




நீ என்னை ஏமாற்றினாய்
பெருங்கோபம் கொண்டேன்
என் மீது ... உன்னை நம்பியதற்காக

அந்த கோபத்தின் முன்
கழித்தல் குறியிட்டு இறங்கியிருக்கலாம்!
மேலே ஏறிவிட்டேன் கூட்டல் குறியிட்டு!!
வானத்தை தொடும் அளவிற்கு உயர்ந்து விட்டேன்!
கண்ணுக்குத் தெரியாத புள்ளி ஆகிவிட்டாய் நீ இன்று!

கடமைப்பட்டிருக்கிறேன் நண்பனே!
கடமைப்பட்டிருக்கிறேன்!
நீ என்னை ஏமாற்றியதற்காக
நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்!

Wednesday, August 8, 2007

மாற்றம்!!!!!

மாற்றம் தான் வாழ்வில் நிலையானது!!! மாற்றத்தைச் சந்திக்க தயாராகிறவன்தான் வாழ்வில் ஏற்றம் பெருகிறான் என்பதை நன்கறிந்திருந்தும் அதை நேரில் சந்திக்கும் பொழுது ஒரு அழுத்தம், மன-அழுத்தம்!!!

மனம் தன் சுகவாசத்தை விட்டுவிட தயக்கம் காட்டுகிறது!!
இன்னும் வாழ்க்கைப் போருக்கு தயாராகவில்லை என்பதற்கு
இது தான் அறிகுறியா???

மாற்றம் இல்லையேல் ஏற்றம் இல்லையே!
அன்னையின் மடியிலிருந்து வெளியே
முதல் மாற்றம் தொடங்கி
தந்தையின் கைகளிலிருந்து தொலைவில்
பள்ளிக்கூடத்திலிருந்து கல்லூரியில்
நண்பர்களைப் பிரிந்து தனியே
வாழ்க்கை புரிந்தது முதலே!
மாற்றம்! மாற்றம்! மாற்றமே!!
வாழ்க்கையில் நிலைப்பது மாற்றமே!!

Wednesday, June 13, 2007

எவன் நம்பத்தகுந்த மனிதன்?

எனக்கு மின்னஞ்சல்ல வந்த பல கதைகள்ல நான் மிகவும் ரசித்த கதை. என் நண்பர்களிடம் சொல்லி மகிழ்ந்த கதை. இப்போது பதிவுலக அன்பர்களுக்காக இங்கே!
__________

ஒரு அறிவாளி (உண்மையிலேயே) அந்நாட்டு இளவரசனைக் காண மூன்று பொம்மைகளுடன் சென்றார். இளவரசன் ஆச்சரியம் கலந்த பார்வையுடன் "என்னைப் பார்த்தால் பொம்மைகளுடன் விளையாடுபவன் போலவா உங்களுக்குத் தெரிகிறது?" என்று கேட்டான்.

அதற்கு அறிவாளி, இது ஒரு வருங்கால மன்னனுக்கான பரிசு, இதை கவனமாக பார்தீரானால் ஒவ்வொரு பொம்மையின் காதுகளிலும் ஒரு துவாரம் தெரியும் என்றார்.

அதற்கு, இளவரசன், "சரி! அதனால் என்ன?" என்றான்.

அறிவாளி, இளவரசனிடம் ஒரு மெல்லிய கம்பியை கொடுத்து, அதை ஒவ் பொம்மையின் காதுகளிலும் உள்ள துவாரத்தில் போட்டுப்பார்க்கச் சொன்னார்.

இளவரசனும், கம்பியை எடுத்து முதல் பொம்மையின் ஒரு காதில் போட, அது அந்த பொம்மையின் மற்றோரு காதுவழியே வெளியே வந்தது.

அப்போது அறிவாளி, இவர்கள் ஒரு வகை மனிதர்கள், இவர்களிடம் எதைச் சொன்னாலும் அடுத்த காதுவழியே வெளியே வந்துவிடும். இவர்கள் எதையும் உள்நிறுத்திக் கொள்ள மாட்டார்கள் என்றார். (அதாங்க ஒரு காதுல வாங்கி அடுத்த காதுல விடரது!)

இளவரசன், கம்பியை அடுத்த பொம்மையின் ஒரு காதில் போட, அது அந்த பொம்மையின் வாய்வழியே வெளியே வந்தது.

அப்போது அறிவாளி, இவர்கள் இரண்டாவது வகை மனிதர்கள், இவர்களிடம் எதைச் சொன்னாலும் அதை எல்லோரிடமும் சொல்லிவிடுவார்கள் என்றார். (அதாங்க ஓட்டவாயீனு சொல்லுவோமே!!)

இளவரசன் மூன்றாவது பொம்மையை எடுத்து அதன் ஒரு காதில் கம்பியை நுழைத்தான். அது வெளியே வரவேயில்லை.

திகைத்திருந்த இளவரசனிடம், அறிவாளி, இவர்கள் மூன்றாவது வகை மனிதர்கள், இவர்களிடம் எதைச் சொன்னாலும் அது அவருள்ளேயேதானிருக்கும். அது வெளியே வரவே வராது என்றார். (அவர்களை கல்லுலிமங்கன் என்பேன்! நீங்க என்ன சொல்லுவீங்க? )

இளவரசன் ஆர்வத்துடன் "இதில் எந்த வகை மனிதர்கள் சிறந்தவர்கள்?" என்றான்.

நிற்க!!
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்??????????

....

இந்த கேள்விக்குப் பதிலாக புன்னகையுடன் நான்காவதாக ஒரு பொம்மையைக்் கொடுத்தார் அறிவாளி.

இளவரசன், கம்பியை பொம்மையின் ஒரு காதில் போட (ரொம்ப நேரமா கம்பி விட்டிட்டு இருக்காரு பாருங்க பழக்கமாயிருச்சு!! :-)))), அது காதுவழியே வெளியே வந்தது.

மீண்டும் கம்பியைப் போடச்சொன்னார் அறிவாளி.

இந்த முறை கம்பி வாய்வழியே வெளியே வந்தது. மீண்டும் கம்பியை நுழைக்க அது வெளியே வரவேயில்லை.

"இவர்கள் தான் மிகச்சிறப்பான மனிதர்கள்" என்றார் அறிவாளி.

இப்ப என்னாங்க நினைக்கறீங்க????


அறிவாளி தொடர்ந்தார், "எவனொருவனுக்கு, எப்போழுது கேட்டவைகளை உள்நிறுத்தக் கூடாது என்றும், எப்போழுது கேட்டவைகளை வெளியே சொல்ல வேண்டுமென்றும், எப்போழுது கேட்டவைகளை உள்நிறுத்தி அமைதி காக்க வேண்டுமென்றும் தெரிகிறதோ, அவனே நம்பத்தகுந்த மனிதன்" என்றார்.

link to web designers design guide
Get a free hit counter today.