Thursday, October 11, 2007

இந்திய விஞ்ஞானிகளின் அறிவியல் மோசடி!!!!!

சுவீ டன் நாட்டு விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியின் முடிவுகளை நம் அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர். முனைவர். செல்லத்துரை உட்பட நான்கு பேர் சேர்ந்து ஒரு மாற்றமும் இல்லாமல் (ஈ - அடிச்சாங் காப்பினு சொல்லுவாங்களே!!!) வேறு ஒரு அறிவியல் பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளனர்.

இதில் சம்மந்தப்பட்டவர்களின் விபரம் :

1. கே. முத்துக்குமரன், அண்ணா பல்கலைக் கழகம் , சென்னை
2. ரோசன் பொகலவலெ , ஒக்லகோமா பல்கலைக் கழகம், நார்மன் ஐக்கிய அமெரிக்க நாடுகள்
3. டாம் மத்யுச் , இந்திரா காந்தி அணுமின் நிலையம், கல்பாக்கம்
4. செ. செல்லத்துரை, அண்ணா பல்கலைக் கழகம் , சென்னை


தலைப்பிலும் கட்டுரையிலும் சிறிய மாற்றமே செய்யப்பட்டுள்ளது. இதை அந்த பத்திரிக்கையும் வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் அதை பார்த்த அதன் உண்மையான உரிமையாளர்கள், அந்த பத்திரிக்கையில் புகார் தெரிவித்துள்ளனர்.


மேலும் விவரங்களுக்கு :
http://www.liu.se/en/news-and-events/News
http://horadecubitus.blogspot.com/2007/10/great-minds-think-alike.html#comment-716259335855921555
http://horadecubitus.blogspot.com/2007/10/translation-of-swedish-article-on.html


நேர்மை என்பது எல்லா விடயங்கலிலும் தேவையே!!

இப்படி அச்சு அசல் ஒத்திருக்கும் மோசடியை என்ன சொல்வது!!!




Wednesday, October 3, 2007

ஐன்ச்டீன் (ஐன்ஸ்டீன்) கடவுளைப் பற்றி என்ன சொல்கிறார்?



அல்பர்ட் ஐன்ச்டீன், இவர் தனது படைப்புகளின் மூலம், அறிவியலில் பெரும் திருப்பங்களை ஏற்ப்படுத்தியவர். இருபதாம் நூற்றாண்டின் பிரபலமான மனிதர்களுள் ஒருவர். 1921ஆம் ஆண்டு இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இவரைப் பற்றிய இந்த (அட்டைப் படம் - மேலே பார்க்க) புத்தகத்தை சமீபத்தில் படிக்க நேர்ந்தது,
ரொம்ப வித்தியாசமான மனிதராகவே இருந்திருக்கிறார். தனக்கு வரும் கடிதங்களுக்கு பதில் அளிக்கும் பழக்கமுடையவராக இருந்திருக்கிறார்.

அப்படி ஒரு கடிதமும் அதன் பதிலும் இங்கே:

ஒரு பள்ளி மாணவி தன் கடிதத்தில் கேட்ட கேள்வி: "விஞ்ஞானிகள் பிரார்த்தனை செய்வார்களா? செய்தால் என்ன வேண்டிக் கொள்வார்கள்?"


ஐன்ச்டீன் சொல்கிறார்:

என்னுடைய பதிலை என்னால் இயன்ற அளவு எளிமையாகத் தர முயற்சித்திருக்கிறேன். இது தான் என் பதில்:

இயற்கையின் விதிகளின் படி தான் ஒவ்வொரு செயலும் நடக்கும் என்ற எண்ணமே விஞ்ஞான ஆராய்ச்சிக்கு அடிப்படை. ஆகவே, இந்த விதி மனிதர்களின் செயல்களுக்கும் பொருந்தும். இந்தக் காரணத்தினாலேயே, செயல்களின் நிகழ்வை பிரார்த்தனை பாதிக்கும் (அ) மற்றும் என்ற கூற்றின் மீது, ஒரு ஆராய்ச்சி விஞ்ஞானி நம்பிக்கை வைப்பது மிகவும் அரிதே!! அதாவது, மனிதனுக்கு அப்பாற்பட்ட (கடவுள் என்று சொல்கிற) ஒன்றிற்கு வைக்கும் கோரிக்கை (வேண்டுதல்/ பிரார்த்தனை) மூலம் செயல்களின் நிகழ்வை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை ஒரு விஞ்ஞானிக்கு இருக்க வாய்ப்பில்லை!

இந்தபடியான இயற்கை விதிகளைப் பற்றிய நமது அறிவு, முழுமையற்றதாகவும், கோர்வையற்றதாகவுமே உள்ளது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அதனால், அனைத்து நிகழ்வுகளையும் விளக்கக்கூடிய இந்த விதிகளின் இருப்பை நம்புவதும் ஒருவித நம்பிக்கையே! ஆனால், இந்த நம்பிக்கை, விஞ்ஞான ஆராய்ச்சிகளின் மூலம் பெரிதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்னொரு புறம், இயற்கையின் இந்த விதிகளில் ஒரு சக்தி இருப்பது, அறிவியலில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் அனைவரும் ஒத்துக்கொள்ளக் கூடியதே! இந்த சக்தியானது, மனிதனின் ஆற்றலை விட மிக மேன்மையும் பலமும் வாய்ந்தது. இதன் முன், மனிதன் தன் அளவான சக்திகளுடன் மிக எளியவனாகவே உணரவேண்டும். இந்த வகையில் பார்த்தால், அறிவியலில் ஈடுபட்டிருப்பதுவும் ஒரு மதத்தைப் பின்பற்றுவது போல ஒரு உணர்ச்சியை ஏற்ப்படுத்தும், இந்த மதமானது ஒரு அறிவியல் அறியாத/சாராத மனிதனின் மதத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதே!!!

இந்தக் கருத்துக்களை அறிவியல் சார்ந்தவளாக, நான் ஏற்றுக்கொள்கிறேன். பள்ளிப் பருவம் முதல் பயிலும் அறிவியலின் மீது நம்பிக்கை இருக்கும் போது கடவுளையும் நம்பமுடியுமா?


உங்களின் கருத்துக்களைப் பதியுங்களேன்!

link to web designers design guide
Get a free hit counter today.